இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கும் சேவையை மேலும்விரிவு படுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வாகன வண்டிகளையும் பொலிஸ் அதிரடிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களையும் வழங்குவதற்காக இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்காக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் அமைதி தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவரகள் சமர்த்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.