மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

நிபுணர்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளன. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முறைமை, மேலதிக ஆசனங்களின் ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்களில் முக்கியமான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்யபட்டிருக்கின்றன.