பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 2016ம் ஆண்டு செயலளராக பதவியேற்றதன் பின் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.