Header image alt text

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தது. Read more

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், உதவி அத்தியட்சகர்கள் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 12 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு செயற்பாட்டின் கீழ் பல வருடங்களாக முழுமைப்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், தேவையான மனித வளங்களுக்கு ஏற்ப இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more