கல்முனை பொது மயான வீதி மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தேசிய கட்டிட நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் கல்முனை கிளை அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (04.08.2018) நடைபெறவிருந்த நிலையில், அப்பிரதேச தமிழ்ப் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இரத்துச் செய்யப்பட்டது.

கல்முனையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வலுவலகத்துகக்கான கட்டிடம் அமைக்கப்படவிருந்தது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்டிட நிர்மாண ஒப்பந்க்காரர்கள் அமைப்பின் தலைவர் அத்துல பிரியந்த கலகொட ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கவிருந்தனர். எனினும், பிரதேச தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பையடுத்து அடிக்கல் நாட்டு விழா இடைநிறுத்தப்பட்டது. இவ்வடிக்கல் நாட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட், பெயர்பலகையும் நாட்டப்பட்டு, பொதுக் கூட்டத்துக்கான மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.