ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹூஸைன் தனது இந்த மாத இறுதியில் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.