மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார். இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.

வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.