Header image alt text

சவுதி அரேபியாவில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி கெசட்டை (Saudi Gazette) கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 999 பேர் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சவுதி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பு கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளியான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம் (வயது57) மரணித்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீட் கற்குவியல் என்பவற்றில் மோதி நின்றது. Read more