யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்திருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை கிளையினை அமைச்சர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டித்திற்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்ததுடன் வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தாதியர் விடுதியினை திறந்து வைத்து தாதியர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார். இவருடன் பிரதி சுகாதாரத்துறை அமைச்சர், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா, மாகாணசபை உறுப்பினர் சயந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.