சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைகாவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அண்மையில், சிறைச்சாலை புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை விடயங்களில் இந்த பிரிவை அதிகாரமிக்க உத்தியோகபூர்வ காவற்துறை பிரிவாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை காவற்துறை புலனாய்வு பிரிவு 2010 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 8 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என நீதியமைச்சர் தலதா அத்துகொரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.