யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஹெலிகொப்டர் மூலம் அப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

நேற்றையதினம் மற்றும் இன்றையதினம் ஆகிய இரு தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் கடற்பகுதிகளில் வீசும் வேகமான காற்றின் காரணமாகவும், கடல் மார்க்கமாகப் பயணம் செய்யமுடியாத காரணத்தால், பரீட்சைக்கான வினாத்தாள்களை ஹெலிகொப்டர்மூலம் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.