இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக, பிரித்தானியாவினால் 1.3 மில்லியன் டொலர் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேலைத்திட்டத்தின்கீழ், இந்நிதி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,500 க்கும் அதிகளவிலான மக்களை மீள்குடியேற்றுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.