Header image alt text

மத்திய, மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் வரையானப் பகுதிகளில் இன்றைய தினம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மீள நாடு திரும்பியோர்களில் 242 பேர், மன்னாரில் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் நடமாடும் சேவையின்போது இலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் மன்னார் நகர மண்டபத்தில் இந்த நடமாடு சேவை நடத்தப்பட்டது. Read more