வவுனியா பறநாட்டன்கல் பகுதியில் நேற்று புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு இரு மாடுகள் சம்பவ இடத்திலியே உயிரிழந்துள்ளன.

குறித்த விபத்தின் காரணமாக 20நிமிடங்கள் தாமதித்தே புகையிரதம் பயணித்ததாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.