இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்போது செயற்பாட்டுக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மே மாதம் 01ம் திகதி முதல் அந்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துவிட்டதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதன் பின்பே இது செயற்பாட்டுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.