ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார். கானா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர் உயிரிழக்கும்போது வயது 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த முதலாவது கறுப்பின ஆபிரிக்கராக அவர் அறியப்படுகிறார். மனிதாபிமான நடவடிக்கைக்காக நோபல் பரிசு வென்ற கொபி அனான், மிகவும் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக கொபி அனான் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.