சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்து, உயிரியல் தொழிநுட்ப ஆய்வகமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி குறித்த திட்டமானது இரு நாடுகளுக்குமிடையிலான தொழிநுட்ப மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வலுப்படுத்தும் வகையில், நிபந்தனைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த திட்டம் தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகம, கபினட்டில் முன்வைத்த கோரிக்கைக்கு, அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.