கிளிநொச்சி பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு உள்ளான பேருந்து அவ் இடத்தில் இருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியில் நின்ற இராணுவ வீரர் ஒருவரும், வேறு ஒரு பேருந்தின் நடத்துனரும் விபத்தில் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.