கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உலங்கு வானூர்தி சுற்றுலா சேவையானது, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது, இன்று மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தால், உள்ளூர் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் குறித்த நிகழ்வின்போது தெரிவித்தார். மேலும் குறித்த உலங்கு சேவையை இதன்போது உள்ளூர் சுற்றுலா பயணிகள் இன்று பயன்படுத்தியுள்ளனர்.