பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் எதிர்வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு இந்தத் தினத்தை அனுஷ்டிப்பதற்காக விசேட வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்பது இம்முறை தொனிப்பொருளாகும். பலவந்தமாக ஆட்கள் கடத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வைக் கண்டறிவதற்கான போராட்டத்தின் வெற்றியாக இது கருதப்படுகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி திருமதி தீபிகா உடுகம இந்நிகழ்வுகளி;ல் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனமை இங்கு குறிப்பிடத்தக்கது.