ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த வலய நாடுகளில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி அங்கு பயணமாகவுள்ளார்.

இந்த மாநாடு, நான்காவது தடவையாக நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தில் தங்கியிருக்கும் காலத்தில், நேபாளம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரென்றும், லும்பினி நகரத்தையும் பார்வையிடவுள்ளாரென, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.