யாழ்ப்பாணம், பருத்தித்துறை கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அனுசரணையில் இந்த வீடுகள் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டிருந்தனர்.