இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

14 பேரைக் கொண்ட இந்த குழு, கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் அசோக் ராவோவும் இணைந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.