இன்று 01.09.2018 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில், நெடுந்தூரம் நடந்துவந்து கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்ட 15 மாணவர்களுக்குமான துவிச்சக்கரவண்டிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால், தமது கட்சியின் முப்பதாவது ஆண்டு நிகழ்வாக வழங்கிவைக்கப்பட்டது.
இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான முழுமையான நிதியையும் வழங்கியிருந்தார். Read more