Header image alt text

வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா என தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள்.

இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன்’ என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் நிரந்தர அலுவலகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடச் சந்திக்கு அண்மையாக நேற்று (31) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. அதனைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களின் ஒருவரான முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Read more

புத்தளம் மாரி அம்மன் கோவிலின் உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்த பணம் மற்றும் இயந்திரம் ஒன்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் உண்டியலை உடைத்து 4500 ரூபா பணத்தையும் இயந்திரத்தையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. Read more

முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

அத்துடன், தேசிய அடையாள அட்டை ஒன்றை திருத்திய இணைப் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 250 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும். இதேவேளை, காணாமல்போன அடையாள அட்டை ஒன்றின் இணைப் பிரதி ஒன்றை வழங்குவதற்காக 500 ரூபாவும் அறவிடப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.