க.ஹம்சனன்
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தியின் 22 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
செம்மணிப் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த மாணவி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமான செம்மணிப் பகுதியில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
கிருஷாந்தி குமாரசுவாமி கடந்த 1996 ஆம் ஆண்டு சக மாணவியின் மரண வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். Read more