பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், இருவர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறினர்.