Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிக்குளம் நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

வித்தியால அதிபர் திருமதி கனகரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜீ.ரீ.லிங்கநாதன், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), Read more

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டில்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் 30வது ஆண்டு நிகழ்வாக நேற்று (12.09.2018) செட்டிகுளம், நீலியாமோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையில் தரம் 6ல் கல்விபயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் ஓராண்டு நினைவாக கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அவருடைய மகனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

மேற்படி கற்றல் உபகரணங்களை ஆசிரியை திருமதி புஸ்பா அவர்களிடம் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வழங்கிவைத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் தூதுவராக க்ரே ஆசிர்வாதம் பதவி ஏற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பதவியில் உள்ள ரொட்னி பெரேரா, அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதாகவும்,

அவரது இடத்துக்கு க்ரேஷ் ஆசிர்வாதம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெலானோ என்ற இணையத்தளத்தில் வெளியான இத்தகவலை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காவற்துறை சேவையில் ஒத்துழைத்து செயற்படுவது தொடர்பில் தென்கொரியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல்வாரத்தில் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்நாயக்க தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் முக்கியமான அரசாங்க அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். Read more