யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இன்றுகாலை ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இடம்பெற்றது.
யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது. ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ கொடிகார, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மேலதிக அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், பரஞ்சோதி, பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். Read more