Header image alt text

அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்றுபிற்பகல் சந்தித்தோம். அவர்களில் நால்வரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. ஏனையவர்களும் பலவீனமடைந்தே காணப்படுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களில் அநேகமானவர்கள் மிக நீண்டகாலமாக அதாவது ஒன்பது பத்து வருடங்களாக சிறையில் இருந்துள்ளதாகவும், தம்மை குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். இது சம்பந்தமாக அரசுடன் கதைக்கும்படி கேட்கின்றார்கள். Read more

வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் 2018ம் ஆண்டுக்குரிய வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறுமைக் கோட்டின்கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் செயற்குழு உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், Read more