அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.
இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,
சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்றுபிற்பகல் சந்தித்தோம். அவர்களில் நால்வரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. ஏனையவர்களும் பலவீனமடைந்தே காணப்படுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களில் அநேகமானவர்கள் மிக நீண்டகாலமாக அதாவது ஒன்பது பத்து வருடங்களாக சிறையில் இருந்துள்ளதாகவும், தம்மை குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். இது சம்பந்தமாக அரசுடன் கதைக்கும்படி கேட்கின்றார்கள். Read more