Header image alt text

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மோதவேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறானதாகும். தங்கள் கருத்துக்களையும், கட்சிரீதியான செயற்பாட்டுகளையும் முன்னெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும், தமிழ் மகனுக்கும் உண்டு.

கருத்துக்களை கருத்துக்களால்தான் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கட்சி அலுவலகங்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் வன்முறையினை பிரயோகிப்பது கட்சிகளிடையே தேவையற்ற பகைமை முரண்பாட்டை உருவாக்கும்.

இத்தகைய செயல்கள் அநாகரிகமானதும் மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

க.சிவநேசன்,
அமைச்சர் – வட மாகாணசபை,
பொருளாளர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
20.09.2018.

ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 15.09.2018 சனிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச கலாச்சார நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்துள்ளது. இதன்போது தமிழர் பாரம்பாரிய உணவு வகைகளை அறிமுகம் செய்ததோடு மட்டும்மல்லாது, தாயகத்தது உறவுகளுக்கான வாழ்வாதார உதவிகளையும் செய்துவருகின்றது. இந்நிகழ்வில் பெருந்தொகையிலான புலம்பெயர் தமிழ்மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

அங்கு இடம்பெற்றுவரும் கொண்டாட்டங்களின்போது உணவுச் சாலைகளை அமைத்து, தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தாயகத்தில் வாடும் உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி தொடர்ந்து செய்து வருகின்றது. Read more

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்தக் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகலுக்குப் பின்னரே, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. Read more