ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 15.09.2018 சனிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச கலாச்சார நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்துள்ளது. இதன்போது தமிழர் பாரம்பாரிய உணவு வகைகளை அறிமுகம் செய்ததோடு மட்டும்மல்லாது, தாயகத்தது உறவுகளுக்கான வாழ்வாதார உதவிகளையும் செய்துவருகின்றது. இந்நிகழ்வில் பெருந்தொகையிலான புலம்பெயர் தமிழ்மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

அங்கு இடம்பெற்றுவரும் கொண்டாட்டங்களின்போது உணவுச் சாலைகளை அமைத்து, தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தாயகத்தில் வாடும் உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி தொடர்ந்து செய்து வருகின்றது. தமது உழைப்பில் சிறு பகுதியை தமது உறவுகளுக்கு உதவும் புலம்பெயர் வாழ் நல் உள்ளங்கள், தமது ஒரு நாள் உழைப்பினை முழுவதுமாக உறவுகளுக்கு வழங்கும் முகமாக தமது நேரத்தை முழுமையாக மக்கள் அர்ப்பணித்து இந்த நிகழ்வின்போது மேற்படி பணியினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ் தொண்டர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.