தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மோதவேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறானதாகும். தங்கள் கருத்துக்களையும், கட்சிரீதியான செயற்பாட்டுகளையும் முன்னெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும், தமிழ் மகனுக்கும் உண்டு.

கருத்துக்களை கருத்துக்களால்தான் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கட்சி அலுவலகங்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் வன்முறையினை பிரயோகிப்பது கட்சிகளிடையே தேவையற்ற பகைமை முரண்பாட்டை உருவாக்கும்.

இத்தகைய செயல்கள் அநாகரிகமானதும் மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

க.சிவநேசன்,
அமைச்சர் – வட மாகாணசபை,
பொருளாளர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
20.09.2018.