Header image alt text

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமடிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இதன்போது மலேசிய பிரதமர் சார்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த கௌரவத்துடன் வரவேற்கப்பட்டார். இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். Read more

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் உட்பட நான்கு குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான கலைமுகிலன், வீ. பாலமுருகன் மற்றும் ரகுநாதன் ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குற்றத்திற்காக அவர்களுக்கு 2500 மலேசிய ரிங்கிட்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. Read more

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். காவல் நிலையத்திற்கு அருகாமையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று காலை 9.00 மணி முதல் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலும் இருக்கின்றன. Read more

சம்பள முரண்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார். அன்றைய தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார்.