ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமடிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இதன்போது மலேசிய பிரதமர் சார்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த கௌரவத்துடன் வரவேற்கப்பட்டார். இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். Read more