Header image alt text

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு

டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

ஆர்.பி. ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

எல்.பி. ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு Read more

சகோதரியின் கணவரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவருவரையும் சாகும் வரையில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சகோதரியின் கணவரை படுகொலை செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். இஸ்ஸடீன் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். Read more

மக்களின் நம்பிக்கை மற்றும் மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது, நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி நல்லிணக்கத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதே என அவர் தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் நேற்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கை 19வது திருத்த சட்டத்தை நேரடியாக மீறுவதாகவும், சர்வதேச சமூகம் இலங்கையின் முறையான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார். Read more

அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில் வசித்து வரும் வைத்திய கலாநிதிகள் உள்ளடங்கிய அமைப்புடனான சந்திப்பான்றில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் அவர்கள் அதனைத் தொடர்ந்து கனடாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், வட கிழக்கில் தமிழ் மக்களின் நில அபகரிப்பு மற்றும் இனம், மத விஸ்தரிப்பிற்கு எதிராக தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தார்மீக ஆதரவைக் கோரும் வகையிலும் கனடா வாழ் மக்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வானது நாளை (30.10.2018) செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள சங்கமம் விருந்துபசார மண்டபத்தில் (Sankkamam Party Hall, 42 Tuxedo ct, Scarborough, Ontario, M1G 3S3.) நடைபெறவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவை கைது செய்யுமாறு தெரிவித்தே, ஊழியர்கள் இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள் நேற்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மோட்டார் குண்டுகள் பொலித்தீன் பை ஒன்றில் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக அரலகங்வில விஷேட அதிரடி படையினருக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி நேற்று 12 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,

அமைச்சர்களின் விபரம் Read more

சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் நேற்று வரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமானப்பணியின் போது அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. Read more