ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் என்னும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்; ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இன்றுமாலை 5.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர்களான ஸ்கந்தவரோதயன்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், கணேசவேல், ஐயாத்துரை இராமசாமி, கந்தையா தனபாலசிங்கம், எஸ்.செல்லையா, தம்பிப்பிள்ளை தேவராஜன், திருமதி விஜயலட்சுமி லெட்சுமணன், வைத்தியக்கலாநிதி எஸ்.சிவானந்தராஜா ஆகியோரும், பழைய மாணவர் தாய்சங்க போசகர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் விசேட சித்திபெற்ற மாணவ மாணவியரும் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் சண்டிலிப்பாய் சண் சுருதி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.