யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 135ஆவது மாதிர கிராமான நாவலர் கோட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று (07.10.2018) காலை 8மணியளவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மூலிகைத் தோட்டமும், மாதிரிக் கிராமத்திற்காக கட்டப்பட்ட கிணறும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வின்போது வீடுகளுக்கான ஆவணப் பத்திரங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதோடு, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள், உதவித் தொகைகள், உதவிப் பொருட்கள் என பல உதவிகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் என்.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், Read more