Header image alt text

யாழ். குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நிதிப் பங்களிப்பில் வருடாந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் 17.10.2018 புதன்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்றது.

குப்பிழான் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கத் தலைவரும், ஆசிரியருமான திரு. தி.சசீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஸன், யாழ். இந்து கலாச்சார அமைச்சின் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவ மகாலிங்கம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் ந.சிவலிங்கம், எழுத்தாளர் ஐ.சண்முகலிங்கன் ஆகியோரும், Read more

யாழ். இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை 13.10.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அவர்களின் தலைமையில் காலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.

ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலுவதுவெல, திருமதி அலுவெதுவல, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி கொடகந்த, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாநகர மேயர் இ.ஆர்னோல்ட், மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, கே.சயந்தன், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், Read more