யாழ்ப்பாணம் ஊரெழு KMI மற்றும் உரும்பிராய் லோகா அகடமி இணை நிறுவனங்களின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் (21.10.2018) பிற்பகல் 3.30மணியளவில் இணை நிறுவனங்களின் ஆசிரியர் மு.கயூரகன் தலைமையில் ஊரெழு KMI முன்றலில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன், வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சந்திரலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி மிமலாதேவி விமலநாதன், உரும்பிராய் இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி பொன்மலர் தர்மலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Read more