Header image alt text

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, மாகாண ஆளுநர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டில், மாகாண சபைகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்றது. Read more

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிவுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுதங்கள் அகற்றுதல் மற்றும் குறைத்தல் அலுவலக பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த தினம் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக, நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் 50 பேரளவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.