சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக, நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் 50 பேரளவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.