இலங்கையில், ஆறு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைந்து, அம்மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளமையானது, பலரதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதென,

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகள் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போதே, அந்த நாடுகளின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.