

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமரின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. பிரதமரின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ள எஸ். அமரசேகர தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.