இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ம் திகதியன்று ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முந்தைய அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், அரசிலமைப்பு சபை மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.