கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபணத்தின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதி மன்றில் ஆஜர்படுத்த போது அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.