Header image alt text

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் இன்று சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் இன்று மட்டக்களப்பு நோக்கி சென்றிருந்தனர். Read more

ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றம் பல தடவைகள் கூடிய போதிலும், பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. Read more

ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால்,

உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் ஆற்றிய உரையில் தெரிவித்தார். மஹிந்த தரப்பு எம்.பிக்கள், இன்றைய சபை அமர்வைப் புறக்கணித்துள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் இன்று அமர்வில் கலந்துகொண்டு, மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் இன்று காலை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. Read more

புத்தளம் நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல.01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (28.11.2018) ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்போது மேற்படி பாடசாலைக்கான ஒலிபெருக்கி சாதனங்களை பாடசாலை சமூகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி ரஞ்சிதமலர் ரவிச்சந்திரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வாணி, ஆசிரியர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

ந.லெப்ரின்ராஜ்

ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைய விருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு சுமுகமான நிலைமை உருவாகவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? Read more

(திருமலை நவம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சட்டபூர்வமானதா? அரசியல் சாசனத்துக்கு ஏற்பவா பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவதற்காகவே 122 உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாவிட்டாலும் உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றே ஆகவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவும் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.
Read more

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் அவர் ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன் அரசியல் நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுவார் என இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.