பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7ம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். நவம்பர் 16ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்தபோதும் தன்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் பின்னர் பாராளுமன்றத்தை 7ம் திகதி கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.