முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்றுக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118பேர் கைச்சாத்திட்ட யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது.