Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் 1.30மணியளவில் வவுனியாவில் கூடியது.

இதன்போது அரசியலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினால் உருவான பிரச்சினைகள், பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் கட்சியிலிருந்து சென்று மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டமை, கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மக்கள் சந்திப்பு இன்றுமுற்பகல் 11மணியளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள ஆதி மண்டபத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமும் கூட. அந்த செயற்பாட்டுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read more

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு, Read more