Posted by plotenewseditor on 4 November 2018
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மக்கள் சந்திப்பு இன்றுமுற்பகல் 11மணியளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள ஆதி மண்டபத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தெளிவுபடுத்திய கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியமை ஒரு அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமும் கூட. அந்த செயற்பாட்டுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றபோது நாங்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read more