இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இராஜாங்க திணைக்களம் இதன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த அர்ப்பணிப்புள்ள சகா என்ற அடிப்படையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு ஜனநாயக ஸ்தாபனங்களும் ஜனநாயக நடைமுறைகளும் மதிக்கப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் என இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.